Search

admin

Mar 14, 2026

உள்ளூர்

போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் 10 பேர் கைது

கடந்த 12ஆம் திகதி திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட மீன்பிடி படகு ஒன்றிலிருந்து போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களையும் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவர்களை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 176 கிலோ 568 கிராம் ஹெரோயின், 478 கிலோ 326 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றை வைத்திருந்தமை, இறக்குமதி செய்தமை மற்றும் கடத்தியமை, அத்துடன் 8 பிஸ்டல்கள், 15 மெகசின்கள், 2 டி-56 ரக துப்பாக்கிகள், ஒரு எம்-16 ரக துப்பாக்கி மற்றும் அதன் 04 மெகசின்களை இறக்குமதி செய்தமை மற்றும் கைவசம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All