Search

admin

Mar 12, 2026

உள்ளூர்

புதிய 10 தூதுவர்கள் : ஜனாதிபதி நியமனம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்களாக நியமிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அண்மையில் பெயரிடப்பட்ட 10 தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளின் நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

புதிய நியமனங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பின்வருமாறு:

  • தர்ஷன எம். பெரேரா - மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

     

  • டி.எம்.எஸ்.பி. தஸநாயக்க - ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

     

  • தயானி மெந்திஸ் - ஒஸ்ரியாவிற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

     

  • எஸ்.பி.டபிள்யூ. பத்திரண - ருமேனியாவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

  • செல்வி என்.ஐ.டி. பரணவிதான - எத்தியோப்பியா மற்றும் ஆபிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

     

  • எஸ்.கே. சந்திரசிறி - இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

     

  • தம்மிக்க பெர்னாண்டோ - கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

     

  • அனுர விதானகே - லெபனானுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

     

  • பேராசிரியர் எம்.ஐ. பஸீஹா அஸ்மி - ஈரானுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்க உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

     

  • எம். பாரூக் எம். பௌசர் - பலஸ்தீனத்திற்கான இலங்கை பிரதிநிதியாக நியமிக்க உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All