
admin
Apr 18, 2026
உலகம்
“ஒப்பந்தம் இல்லை என்றால் குண்டுவீச்சு” – ட்ரம்ப்

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது நடைமுறையிலுள்ள போர்நிறுத்தம் அடுத்த வாரம் முடிவடைய உள்ளது.
அதனை நீடிக்காவிட்டால் மீண்டும் போர்ச் சூழல் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ள ட்ரம்ப், எனினும் வெற்றிகரமான ஒப்பந்தம் ஒன்றை எட்ட முடியும் என தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கும் ஈரானின் முயற்சிக்கு அதிபர் ட்ரம்ப் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





