Search

admin

Dec 30, 2025

உள்ளூர்

அனர்த்த நிவாரண நிதியை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்

அதிகரிக்கப்படும் அனர்த்த நிவாரண நிதிஅனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்களை கட்டியெழுப்பும் வகையில் அதற்கான அனர்த்த நிவாரண நிதியை அதிகரிக்க அமைச்சரவை இணங்கியுள்ளது.

இதற்கமைய அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட அனைத்து வர்த்தர்களுக்கு 6 மாதகால சலுகை காலமொன்றுடன் 3 வருடங்களுக்குள் செலுத்தும் வகையில் நுண் நிறுவனங்களுக்கென அதிகபட்சமாக 250,000 ரூபாவை கடந் நிவாரணமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறியளவிலான வர்த்தகர்களுக்கு அதிகபட்சமாக ஒரு மில்லியனும் மத்திய மற்றும் நடுத்தரளவிலான வர்த்தகர்களுக்கு அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபாவையும் 3 வீத வருட வட்டி அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற வணிக வங்கி மற்றும் விசேட வங்கிகள் ஊடாக கடன் நிவாரணமாக பெற்றுக்கொடுக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All