2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு அறிவிப்பு.

உள்ளூர்August 27, 2025 · 12 months முன்2
ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு அறிவிப்பு.

ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு அறிவிப்பு.

இலங்கை குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லத்தத்தக்க உத்தரவிடக்கோரி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை அக்டோபர் 17ஆம் திகதி பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சூரசேன,உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குமுதினி விக்ரமசிங்கே மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் பரிசீலிக்கப்பட்டன.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிட்டுள்ள அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட பிரதீ வாதிகளுக்கு எந்த அறிவிப்புகளும் கிடைக்கவில்லை என்று சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த மனுவை அக்டோபர் 17ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது