2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சபாநாயகர் கூறியதாகப் பரப்பப்படும் தவறான செய்தி குறித்த அறிவிப்பு

உள்ளூர்January 13, 2026 · 7 months முன்2
சபாநாயகர் கூறியதாகப் பரப்பப்படும் தவறான செய்தி குறித்த அறிவிப்பு

நாடாளுமன்ற வளாகத்திற்குள் போதைப்பொருள், மதுபானம் மற்றும் சிகரெட் பயன்படுத்தும் ஊழியர்கள் குழுவினருக்கு எதிராக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன கடும் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளார் எனச் சில ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என இலங்கை நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த செய்தி எந்தவிதமான அடிப்படை ஆதாரமுமின்றி வெளியிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளதாக நாடாளுமன்றச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறான ஊழியர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்றத்தின் எந்தவொரு அதிகாரிக்கும் ஆலோசனை வழங்கவில்லை என அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

உணவகப் பிரிவு உள்ளிட்ட சில ஊழியர்கள் இரகசியமான முறையில் போதைப்பொருள் மற்றும் மதுபானங்களைப் பயன்படுத்துவதாகக் கிடைத்த தகவலின் பேரில் சபாநாயகர் இந்த ஆலோசனைகளை வழங்கியதாகப் பரப்பப்படும் செய்தியும் பொய்யானது.

இவ்வாறான நிலைமைகள் வளர இடமளித்தமைக்காக நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரிகளை சபாநாயகர் கண்டித்ததாகக் கூறப்படும் தகவல்களிலும் எவ்வித உண்மையும் இல்லை என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.