2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அதிக விலைக்கு அரிசி விற்பனைக்கு முற்றுப்புள்ளி: நாடு முழுவதும் கடும் சுற்றிவளைப்பு!

உள்ளூர்May 2, 2026 · 4 months முன்3
அதிக விலைக்கு அரிசி விற்பனைக்கு முற்றுப்புள்ளி: நாடு முழுவதும் கடும் சுற்றிவளைப்பு!

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிய, நுகர்வோர் விவகார அதிகார சபை நாடு முழுவதும் தொடர்ச்சியான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக, இன்று பிலியந்தலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.