2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மலர் பனியால் வெண்மையாக மாறிய அழகிய காலை

உள்ளூர்March 3, 2026 · 6 months முன்2
மலர் பனியால் வெண்மையாக மாறிய அழகிய காலை

நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள குதிரைப்பந்தய மைதானம் உள்ளிட்ட பல இடங்களிலும், பட்டிப்பொல, மீபிலிமான ஆகிய பகுதிகளிலும் இன்றும் (03) அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை மலர் பனி (பனித்துளி) பொழிவு காணப்பட்டது.

அப்பகுதிகளில் வெப்பநிலை செல்சியஸ் 5 – 6 பாகை வரை பதிவானது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாத இறுதி வரை நுவரெலியாவில் காணப்படும் மலர் பனி நிலைமை, இவ்வருடம் கடந்த காலங்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களின் தாக்கத்தால் மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலும் காணப்படுவது சிறப்பம்சமாகும்.

நகரம் முழுவதும் உள்ள பூங்காக்களில் உள்ள செடிகளின் மேல் உப்பு தூவியதுபோல் மலர் பனி படர்ந்து காணப்பட்டமை கண்கவர் காட்சியாக இருந்தது.

இந்த அழகிய இயற்கைக் காட்சியை காண உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்