2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மின்சாரச் சிக்கனமா? திருடர்களுக்கு அங்கீகாரமா? முன்னாள் அமைச்சர் கேள்வி

உள்ளூர்April 1, 2026 · 5 months முன்2
மின்சாரச் சிக்கனமா? திருடர்களுக்கு அங்கீகாரமா? முன்னாள் அமைச்சர் கேள்வி

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வீதி விளக்குகளை அணைத்து வைப்பதானது திருடர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் ஒரு செயற்பாடு என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரதான வீதிகள் மட்டுமன்றி கிளை வீதிகளிலும் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இதனால் வீதிகள் கடும் இருளில் மூழ்கியுள்ளன.

திருடர்கள் இருளைப் பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபட இது வாய்ப்பாக அமைகின்றது.” என அவர் சுட்டிக்காட்டினார்.

இரவு 10 மணிக்கு மேல் விளக்குகளை ஒளிரச் செய்வது திருடர்கள் கொள்ளையடித்த பொருட்களைப் பார்ப்பதற்கா? என கேள்வி எழுப்பிய அவர், நிலக்கரி ஊழலில் ஈடுபட்டவர்களை ஜனாதிபதி எவ்வித தயக்கமுமின்றி பாதுகாத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.