2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அடையாள அட்டை வழங்கும் பணிகள் இன்று முதல் மீள ஆரம்பம்

உள்ளூர்March 30, 2026 · 5 months முன்2
அடையாள அட்டை வழங்கும் பணிகள் இன்று முதல் மீள ஆரம்பம்

இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அண்மையில் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன

அதன்படி, கடந்த 23, 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் ஒரு நாள் சேவை ஊடாக தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தந்து அதனைப் பெற்றுக்கொள்ள முடியாது போனவர்களுக்கு இன்று தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.

அதற்கமைய, பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் இந்த செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.