2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

எரிபொருள் கையிருப்பு குறித்து முக்கிய அறிவிப்பு

உள்ளூர்March 26, 2026 · 5 months முன்0
எரிபொருள் கையிருப்பு குறித்து முக்கிய அறிவிப்பு

இலங்கையின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மேலதிக எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இது குறித்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவிக்ககையில்,

35,500 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று நேற்று (25) நாட்டை வந்தடைந்துள்ளதுடன், அதிலுள்ள எரிபொருளைத் தரையிறக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இம்மாதத்திற்குள் மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளன.

அதன்படி,முதலாவது கப்பலில் 30,000 மெற்றிக் தொன் 92 ரக பெற்றோல் மற்றும் 5,000 மெற்றிக் தொன் 95 ரக பெற்றோலும் இரண்டாவது கப்பலில் 32,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 8,000 மெற்றிக் தொன் விமான எரிபொருளும் கொண்டுவரப்படவுள்ளது.