2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 36°
LIVE
திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!

முன்பள்ளி வகுப்புகள் இணையவழியில் நடத்துவதற்கு தடை

உள்ளூர்March 14, 2026 · 5 months முன்0
முன்பள்ளி வகுப்புகள் இணையவழியில் நடத்துவதற்கு தடை

சிறுவர்கள் 3-5 வரையிலானவர்களுக்கு ,இணையவழி ஊடாகக் கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு முரணானது என பெண் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முன்பள்ளி மற்றும் ஆரம்பப் பிரிவு மாணவர்களை இலக்காகக் கொண்டு தற்போது முன்னெடுக்கப்படும் இணையவழி கருத்தரங்குகள் தொடர்பாக பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிள்ளைகளின் மன ஆரோக்கியத்தைக் கருத்திற் கொண்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. ஒரு குழந்தையின் சிறந்த ஆசிரியர் சூழலும் நேரடி அனுபவங்களுமே தவிர டிஜிட்டல் திரை அல்ல என்றும் அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது. இதன்படி, பிள்ளைகளின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பில் பெற்றோராக அதிக அவதானம் செலுத்தி செயற்படுமாறு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.