2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

உள்ளூர்March 4, 2026 · 5 months முன்0
பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய (04) பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகரால் குறித்த அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற தகவல் அமைப்புகள் மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில் வெளிவாரியான விசாரணையை நடத்துவதற்கு 2025.07.25 அன்று பாராளுமன்ற பதவிநிலை ஆலோசனைக் குழு தீர்மானித்திருந்தது.

அந்தத் தீர்மானத்திற்கு அமைய, ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சுஜாதா அலகப்பெருமவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் இறுதி அறிக்கை 2025.11.24 அன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2026.02.19 அன்று நடைபெற்ற பாராளுமன்ற ஆலோசனைக் குழுவின் தீர்மானத்திற்கு அமைய, குறித்த அறிக்கை தற்போது சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்காக அந்த அறிக்கையின் பிரதியொன்று பாராளுமன்ற நூலகத்திலும் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.