2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

மலர் பனியால் வெண்மையாக மாறிய அழகிய காலை

உள்ளூர்March 3, 2026 · 6 months முன்2
மலர் பனியால் வெண்மையாக மாறிய அழகிய காலை

நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள குதிரைப்பந்தய மைதானம் உள்ளிட்ட பல இடங்களிலும், பட்டிப்பொல, மீபிலிமான ஆகிய பகுதிகளிலும் இன்றும் (03) அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை மலர் பனி (பனித்துளி) பொழிவு காணப்பட்டது.

அப்பகுதிகளில் வெப்பநிலை செல்சியஸ் 5 – 6 பாகை வரை பதிவானது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாத இறுதி வரை நுவரெலியாவில் காணப்படும் மலர் பனி நிலைமை, இவ்வருடம் கடந்த காலங்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களின் தாக்கத்தால் மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலும் காணப்படுவது சிறப்பம்சமாகும்.

நகரம் முழுவதும் உள்ள பூங்காக்களில் உள்ள செடிகளின் மேல் உப்பு தூவியதுபோல் மலர் பனி படர்ந்து காணப்பட்டமை கண்கவர் காட்சியாக இருந்தது.

இந்த அழகிய இயற்கைக் காட்சியை காண உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்