2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

பிரதமரையும் சந்தித்தார் ஜோர்ஜியேவா

உள்ளூர்February 18, 2026 · 6 months முன்2
பிரதமரையும் சந்தித்தார் ஜோர்ஜியேவா

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு நேற்று (17) கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அதற்காக தற்போதைய அரசாங்கம் காட்டிய அர்ப்பணிப்பு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் நிலவும் பொருளாதார சவால்களை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.