2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மணல் அகழ்வு ஊழல் தொடர்பில் சிறிதரனுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு

உள்ளூர்February 18, 2026 · 6 months முன்1
மணல் அகழ்வு ஊழல் தொடர்பில் சிறிதரனுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மணல் அகழ்வு ஊழல் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவில் புலனாய்வு முன்னணியின் (Civil Intelligence Front) தலைவர் சஞ்சய மஹவத்த இந்த முறைப்பாட்டை ஊடகங்களுக்கு முன்னிலையில் வழங்கினார்.

வடக்கு பகுதியில் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த “மணல் கொள்ளை” மூலம் பாரிய ஊழல் மற்றும் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு அரசாங்கத்தையும் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஸ்ரீதரன் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவதாக மஹவத்த குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த அரசாங்க காலம் முதல் இடம்பெற்று வரும் இந்த மணல் மாஃபியா குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிவில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.