2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

குறிப்பிட்ட 5 இடங்களில் புதிய ஓட்டுநர் உரிம சேவை ஆரம்பம்

உள்ளூர்February 9, 2026 · 6 months முன்1
குறிப்பிட்ட  5  இடங்களில் புதிய ஓட்டுநர் உரிம சேவை ஆரம்பம்

வெளிநாடுகளில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமங்களின் அடிப்படையில், தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் சேவையானது கடந்த 2ஆம் திகதி முதல் விரிவாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இதுவரை வேரஹெர மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அலுவலகங்களில் மாத்திரம் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவையை, இனிவரும் காலங்களில் குருணாகல், ஹம்பாந்தோட்டை, கம்பஹா, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலக அலுவலகங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.