2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கண்டியில் நாளை 22 மணிநேர நீர்வெட்டு

உள்ளூர்February 7, 2026 · 6 months முன்0
கண்டியில் நாளை 22 மணிநேர நீர்வெட்டு

கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை காலை முதல் 22 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை ஏற்படவுள்ளது.

குறித்த நீர்வெட்டு நாளை காலை 6.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அந்தச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.