2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் சபை அமர்வு.

உள்ளூர்February 5, 2026 · 6 months முன்1
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் சபை அமர்வு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஒன்பதாவது சபை அமர்வு இன்று களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்ற இச்சபை அமர்வில் உப தவிசாளர் வசீகரன், உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிதிப் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கருவள சிகிச்சைக்கு மாதாந்தம் மூன்று இலட்சம் வழங்குதல், எதிர்வரும் 15ஆம் திகதி துறை நீலாவணையில் சர்வதேச தரத்திலான பாலர் பாடசாலை ஒன்றைத் திறத்தல், இதுவைரை வீதி மின் விளக்குகள் பொருத்தப்படாத இடங்களில் மின் விளக்குகளைப் பொருத்துதல், மழை காலங்களில் தேங்கிக்கிடக்கும் வெள்ள நீரை வெளியேற்ற அவ்வப்போது உடன் நடவடிக்கை எடுத்தல் போன்ற பல தீரமானங்கள் வாத பிரதிவாதங்களுடன் எடுக்கப்பட்டன.