2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

GovPay ஊடாக அபராதம் செலுத்திய அதிகளவான சாரதிகள்

உள்ளூர்February 4, 2026 · 6 months முன்1
GovPay ஊடாக அபராதம் செலுத்திய அதிகளவான சாரதிகள்

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தைச் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட “GovPay” செயலி மூலம், 2025 ஆம் ஆண்டில் 40,000 க்கும் மேற்பட்ட சாரதிகள் அபராதத் தொகையினை செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, மொத்தம் 46,635 சாரதிகள் அபராதத் தொகையை “GovPay” செயலி ஊடாகச் செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 11,715 சாரதிகள் இந்தச் செயலி மூலம் அபராதத் தொகையினை செலுத்தியுள்ளனர்.

வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையில் அதிகளவான தொகை அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவினால் ஈட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.