2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் கலந்துரையாடல்

உள்ளூர்January 30, 2026 · 7 months முன்2
சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் கலந்துரையாடல்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), அரசாங்க தாதிகள் சங்கம், பொது சுகாதார குடும்பநல உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் ஏனைய சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (29) GMOA தலைமையகத்தில் நடைபெற்றது.

தேசிய சுகாதார சேவையை தற்போது பாதித்துள்ள பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சுகாதார அமைச்சரின் ஆக்கபூர்வமான தலையீட்டிற்காக GMOA வழங்கிய 48 மணிநேர கால அவகாசம் நாளை மறுதினத்துடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் சாதகமான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என GMOA எச்சரித்துள்ளது.

ஏனைய தொழிற்சங்கங்களுடன் நேற்று நடத்தப்பட்ட கூட்டுப் பேச்சானது, சுகாதார சேவையின் பல்வேறு பிரிவுகளையும் ஒன்றிணைத்த ஒரு பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

இந்தக் கலந்துரையாடல்கள் ஒருபுறம் இடம்பெற்ற போதிலும், மருத்துவ ஊழியர்களின் தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக இன்று நாட்டின் பல பகுதிகளில் உள்ள நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன், வழமையான மருத்துவச் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்தன.