2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சிரேஷ்ட மெய்வல்லுநர் தொடரில் பங்கேற்ற அசங்க திஸாநாயக்க நாடு திரும்பினார்

விளையாட்டுJanuary 27, 2026 · 7 months முன்2
சிரேஷ்ட மெய்வல்லுநர் தொடரில் பங்கேற்ற அசங்க திஸாநாயக்க நாடு திரும்பினார்

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற 06ஆவது சிரேஷ்ட மெய்வல்லுநர் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 5,000 மீற்றர் நடைப்பந்தயத்தில் தங்கப் பதக்கத்தையும், 3,000 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற அசங்க திஸாநாயக்க, இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்தார்.

இப்போட்டித் தொடர் ஜனவரி 23 முதல் 25 வரை இந்தியாவின் அசாமில் நடைபெற்றது.

இதில் ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த 20 நாடுகளிலிருந்து சுமார் 1,000 சிரேஷ்ட வீரர்கள் பங்கேற்றனர்.

பதக்கங்களை வெற்றி பெற்ற அசங்க திஸாநாயக்க, இன்று அதிகாலை 01.55 மணியளவில் சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் 6.E.-1171 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ஹிங்குராக்கொடை பகுதியைச் சேர்ந்த இவர் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி என்பதோடு, தற்போது உடற்பயிற்சி சிகிச்சையாளராக (Physiotherapist) பணியாற்றி வருகிறார்.