2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நாளாந்த சோதனையில் 578 சந்தேக நபர்கள் கைது

உள்ளூர்January 20, 2026 · 7 months முன்1
நாளாந்த சோதனையில்  578 சந்தேக நபர்கள் கைது

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஊடாக நாடு முழுவதும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாளாந்த சோதனைகளின் போது, நேற்று 578 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 நேற்று ஒரு நாளில் மாத்திரம் 29,504 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதன்போது இந்த அளவிலான சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 282 திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

 மேலும், இந்தச் சோதனையின் போது திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மேலும் 177 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அத்துடன், இச்சோதனையின் போது குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 427 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 6 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 தவிர, ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,384 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.