2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அலரிமாளிகையில் இடம்பெற்ற பிரஜா சக்தியின் ஆரம்ப நிகழ்வு

உள்ளூர்January 13, 2026 · 7 months முன்1
அலரிமாளிகையில் இடம்பெற்ற பிரஜா சக்தியின் ஆரம்ப நிகழ்வு

சமூக அபிவிருத்தி சபை பிரதிநிதிகளை தெளிவூட்டும்  தேசிய அளவிலான திட்டத்தின் ஆரம்ப விழா இன்று காலை அலரி மாளிகையில் நடைபெற்றது.

வறுமை ஒழிப்பிற்கான தேசிய இயக்கமான “பிரஜா சக்தி” திட்டத்தின் கீழ், நாட்டின் 14,008 கிராம சேவகர் பிரிவுகளில் நிறுவப்பட்டுள்ள சமூக அபிவிருத்தி சபை பிரதிநிதிகளை தெளிவூட்டும் திட்டம், கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளிப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதன் ஆரம்ப நிகழ்வாக, மேல் மாகாண சமூக அபிவிருத்தி சபைகளின் செயலாளர்கள் மற்றும் தலைவர்களை தெளிவூட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வு, கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளிப்பு  அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னில தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தன சூரியாரச்சி, தேவானந்த சுரவீர மற்றும் நிஹால் அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.