2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

நோர்வூட் – மஸ்கெலியா பிரதான வீதியில் முச்சக்கரவண்டி விபத்து

உள்ளூர்January 11, 2026 · 7 months முன்2
நோர்வூட் – மஸ்கெலியா பிரதான வீதியில் முச்சக்கரவண்டி விபத்து

நோர்வூட் – மஸ்கெலியா பிரதான வீதியில் ரொக்குட் பகுதியில் இன்று (11) மாலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, மாலை 4.00 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.