2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

மதுகம பிரதேச சபை தவிசாளர் பிணையில் விடுவிப்பு!

உள்ளூர்January 8, 2026 · 7 months முன்0
மதுகம பிரதேச சபை தவிசாளர் பிணையில் விடுவிப்பு!

மதுகம பிரதேச சபையின் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் அவரது கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அந்த சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க மதுகம பிரதான நீதவான் எம்.என்.எம். நாநாயக்கார இன்று (08) உத்தரவிட்டார்.

தவிசாளர் தனது கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக மதுகம பிரதேச சபையின் செயலாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார். அந்த முறைப்பாட்டிற்கு அமைய, கடந்த 02ஆம் திகதி மாலை சந்தேகநபரான தவிசாளரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது, சந்தேகநபரை இன்று (08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.