ஹரின் நீதிமன்றில் முன்னிலை – வழக்கு ஒத்திவைப்பு.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (26) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலின்போது தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்காக அவர் இன்று ஆஜரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதுளை நீதவான் நுஜித் டி. சில்வா இவ் வழக்கு விசாரணையை 2026 ஜனவரி 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




