2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இரண்டு ஆண்டுகளுக்கு பின் சுற்றுச்சூழல் சபை கூட்டம் நடைபெற்றது.

உள்ளூர்January 2, 2026 · 8 months முன்2
இரண்டு ஆண்டுகளுக்கு பின் சுற்றுச்சூழல் சபை கூட்டம் நடைபெற்றது.

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் சுற்றுச்சூழல் சபையானது பேராசிரியர் செவ்வந்தி ஜயகொடி தலைமையில் இன்று (02) நடைபெற்றது. இச்சபை, 2023 இன் பிறகு முதன்முறையாக நடைபெற்றது.

கடல் வளங்களை பாதுகாப்பது, மாசடைவதை தடுப்பது, இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியிலுள்ள செயல்பாடுகளின் நிலை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை வழங்குவதன் மூலம் கடல்சார் பாரம்பரியத்தை பாதுகாத்து, நாட்டின் நீல பொருளாதார வளர்ச்சியை (Blue Economy) மேம்படுத்த திட்டமிடப்படுகிறது.

இச்சபையில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி, பிரதி அமைச்சர் என்டன் ஜெயக்கொடி, அமைச்சின் செயலாளர் ரோஹித உடுவாவல, தலைவர் சமந்த குணசேகர, பொது முகாமையாளர் ஜகத் குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.