2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

பெரஹெராவில் யானைகள் குழப்பம் : கண்டியில் பதற்றநிலை

உள்ளூர்December 30, 2025 · 8 months முன்2
பெரஹெராவில் யானைகள் குழப்பம்  :  கண்டியில்  பதற்றநிலை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் புதிய அரிசி விழாவை , கொண்டாடும் விதமாக பல்லேகெலே பகுதியிலிருந்து பயணித்த பெரஹெரா ஊர்வலத்தின் போது இரண்டு யானைகள் குழப்பமடைந்ததால் பூவெலிகட பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு யானை மற்றைய யானையை தாக்க முயன்றதால் இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் சிறிது நேரத்தில், யானை பாகன்களின் உதவியுடன் யானைகள் இரண்டும் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.