2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

காதலன் கண்முன்னே ஆற்றில் குதித்த யுவதி மாயம்!

உள்ளூர்December 29, 2025 · 8 months முன்0
காதலன் கண்முன்னே ஆற்றில் குதித்த யுவதி மாயம்!

வென்னப்புவ, நைனாமடை பாலத்திலிருந்து யுவதியொருவர் நேற்று கிங் ஓயாவுக்குள் குதித்து நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

குறித்த யுவதி தான் காதலித்த இளைஞனுக்கு தொலைபேசியெடுத்து சம்பவ இடத்துக்கு வருமாறு அழைத்ததையடுத்து, அந்த இளைஞனும் நண்பர் ஒருவருடன் பாலத்துக்கருகில் வந்தபோது யுவதி ஆற்றில் குதித்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யுவதியைக் காப்பாற்ற அவரது காதலனும் ஆற்றில் குதித்துள்ளார்.

சுற்றியிருந்தவர்கள் அந்த இளைஞனை பத்திரமாக மீட்ட போதிலும் யுவதி நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

யுவதியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.