நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் – நீர்த்தாரை இயந்திரங்கள் தயார்.

நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நிதி முறைகேடு தொடர்பான வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள அறையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 500 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியுள்ளனர்.
நீதிமன்ற வளாகத்திலும் பொதுமக்கள் கூடிக்கொண்டிருக்கின்றனர் போராட்டம் மேற்கொண்டுள்ள நிலையில், ஏதாவது அசாதாரண நிலை ஏற்படுமாயின், அதனை தடுப்பதற்காக பொலிஸ் நீர்த்தாரை பிரயோக வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




