2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சீனாவிற்கு மாணிக்கக்கற்கள் கடத்த முயன்ற இருவர் கட்டுநாயக்கயில் கைது

உள்ளூர்December 22, 2025 · 8 months முன்0
சீனாவிற்கு மாணிக்கக்கற்கள் கடத்த முயன்ற இருவர் கட்டுநாயக்கயில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கை பயணிகள் பெருமளவான மாணிக்கக்கற்களை ஆசனவாயில் மற்றும் பயணப் பொதிகளில் மறைத்து சீனாவிற்கு கடத்த முயற்சி செய்த்துள்ளனர்.

இவர்கள் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 39 வயதுடைய மாணிக்கக்கல் வர்த்தகர்கள் எனத் தெரிய வருகிறது.

நேற்று (21) இரவு 10.20 மணியளவில், சீனாவின் செங்டு (Chengdu) நகருக்குப் புறப்பட்ட CA-426 இலக்க விமானத்தில் பயணிக்க அவர்கள் வந்தபோது, சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 756 கரட் எடையுள்ள 390 மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டன, இதற்கான மதிப்பு சுமார் 3 கோடி 20 இலட்சம் ரூபா என கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட மாணிக்கக்கற்களில் நீல மாணிக்கம், பத்மராகம், கிரிஞ்சி, சிவப்பு கற்கள், கனக, வெரோட், வைடூரியம், சந்திரகாந்தம், தோரமல்லி மற்றும் நட்சத்திரக் கல் ஆகிய பிரதான வகைகள் அடங்கியுள்ளன.