2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சர்வஜன கட்சி உறுப்பினர் கைது

உள்ளூர்December 16, 2025 · 8 months முன்0
சர்வஜன கட்சி உறுப்பினர் கைது

பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற மனிதப்படுகொலையுடன் தொடர்புடையதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் சமட் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 14ஆம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டார். நபரொருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இந்த கைது இடம்பெற்றிருந்தது. தாக்குதலுக்கு உள்ளான நபரின் பற்கள் உடைந்துள்ளதுடன் அவர் சிகிச்சைகளுக்கு உட்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைதான அப்துல் சமட் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நபர் ஒருவர் உயிரிழந்ததுடன் அதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

மரண விசாரணையின் பின்னர் பகிரங்க தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் உடற்பாகங்கள் இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்த இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

தாக்குதலுக்கு மேலதிகமாக மனித கொலை தொடர்பிலும் சர்வஜன அதிகாரம் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் சமட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கமைய கொலை தொடர்பில் அவர் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.