2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

அனர்த்த நிவாரணத்திற்காக பூட்டானின் நிதியுதவி

உள்ளூர்December 9, 2025 · 8 months முன்4
அனர்த்த நிவாரணத்திற்காக பூட்டானின் நிதியுதவி

பூட்டான் இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர், கர்மா ஹமு டோர்ஜி அவர்கள் அண்மைய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவாக, பூட்டான் அரசாங்கத்தின் சார்பாக USD 200,000 (2 இலட்சம் அமெரிக்க டொலர்) நன்கொடையை நேற்றையதினம் அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளித்தார்.

பூட்டானிய மக்களின் இந்த ஒருமைப்பாட்டிற்காகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நட்பு ரீதியான உறவுகளுக்காகவும் அமைச்சர் விஜித ஹேரத் நன்றியினை தெரிவித்துள்ளார்.