2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

திட்வா புயல் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச்சான்றிதழ்

உள்ளூர்December 4, 2025 · 9 months முன்2
திட்வா புயல் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச்சான்றிதழ்

திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் இறந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கண்டி, நுவரெலியா, பதுளை, குருநாகல், மாத்தளை, கேகாலை, கம்பஹா, முல்லைத்தீவு, அனுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, மன்னார், புத்தளம், இரத்தினபுரி, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா மற்றும் களுத்துறை ஆகிய நிர்வாக மாவட்டங்களிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.

மேற்கூறிய மாவட்டங்களில் காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்கும் நோக்கத்திற்காக, 2010ஆம் ஆண்டு 19ஆம் எண் இறப்பு பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பகுதி 11 இன் பிரிவு 9 இன் விதிகளின்படி, 2025 நவம்பரில் ‘டித்வா’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ‘தேசிய பேரிடர் பகுதிகள்’ என்று அறிவித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.