2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

களு கங்கையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என எச்சரிக்கை!

உள்ளூர்November 30, 2025 · 9 months முன்0
களு கங்கையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என எச்சரிக்கை!

களு கங்கை ஆற்றுப்படுக்கையின் தாழ்வான பகுதிகளைப் பாதிக்கும் வெள்ளப்பெருக்கு நிலைமை எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க வெள்ளப்பெருக்காக மாறக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அதன்படி, களு கங்கை பெருக்கெடுக்கும் பகுதியின் தாழ்வான பகுதிகளான களுத்துறை, இங்கிரிய, ஹொரண, தொடங்கொட, மில்லனியா, புலத்சிங்கள, பாலிந்தநுவர, மதுராவல மற்றும் அகலவத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அந்தப் பகுதிகள் வழியாக பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.