ஹெரோயினுடன் கைதான அதிபர் : விளக்கமறியல் நீடிப்பு

அனுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரின் விளக்கமறியல் தபுத்தேகம நீதவான் நீதிமன்றத்தால் டிசம்பர் 10ஆம் திகதி வரை, இன்று நீடிக்கப்பட்டு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய அதிபரை அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அதிபரின் மகனை வழக்கில் சேர்த்து ஆஜர்படுத்துமாறு தம்புத்தேகம நீதவான் காயத்ரி ஹெட்டியாராச்சி அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு மேலும் உத்தரவிட்டார்.
அனுராதபுரத்தின் எப்பாவல பகுதியில் ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயினுடன் அவர் கடந்த 5ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.




