புகையிரத வண்டியில் மோதுண்ட யானை உயிரிழப்பு

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் இன்று காலை புகையிரத வண்டியில் மோதுண்ட யானை உயிரிழந்துள்ளது.
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரத வண்டியில் மோதி குறித்த யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு வந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் கால் நடை வைத்தியரின் தலைமையில் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.




