2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!

மலையக ரயில் சேவை தாமதம்

உள்ளூர்November 19, 2025 · 9 months முன்0
மலையக ரயில் சேவை தாமதம்

கொழும்பிலிருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹிய ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான சுரங்கப்பாதை அருகில் நேற்று இரவு ஏற்பட்ட கனமழையால், மண் மற்றும் பெரிய கற்பாறைகள் சரிந்தது.

கனமழையால் ஏற்பட்ட மண்சரிவினால் பல பெரிய பாறைகள் ரயில் என்ஜின் மீது விழுந்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலின் பயணிகள் பெட்டிகள் பாதுகாப்பாக ஹப்புத்தளைக்கு மாற்றப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தில் இருந்து பாறைகளை அகற்றவும், தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தவும், நானுஓயா ரயில் நிலைய மீட்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக, கொழும்பு கோட்டையில் இருந்து இயங்கும் அனைத்து பயணிகள் ரயில்களும் தற்காலிகமாக நானுஓயா ரயில் நிலையத்திற்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். பாதை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இந்த கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.