2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கைவிடப்பட்ட சூட்கேசில் குஷ் போதைப் பொருள் மீட்பு

உள்ளூர்November 18, 2025 · 9 months முன்2
கைவிடப்பட்ட சூட்கேசில் குஷ் போதைப் பொருள் மீட்பு

11 கோடியே 36 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதிக்கொண்ட குஷ் போதைப் பொருள் தொகையுடன் கைவிடப்பட்ட சூட்கேஸ் ஒன்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அரச உடமையாக்கப்பட்டுள்ள விமானப் பயணப் பொதிகள் மற்றும் பொருட்கள் பேணப்படும் களஞ்சியத்திலிருந்து இந்த சூட்கேஸ் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 9 மாதங்களாக சூட்கேஸை பொறுப்பேற்பதற்கு எவரும் வருகை தராததன் காரணமாக அதனை திறந்து சோதனையிட சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது அதிலிருந்து 11 கிலோ 367 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தாய்லாந்திலிருந்து வருகை தந்த பயணி ஒருவர் அதனை விமான நிலைய வருகை முனையத்தில் கைவிட்டு விட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.