நாணயசுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ராவல்பிண்டியில் இன்று (14) நடைபெறுகின்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்றது.
அதன்படி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தனர்.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது, மஹிஷ் தீக்ஷனாவுக்கு பதிலாக பிரமோத் மதுஷன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் வழக்கமான கேப்டன் ஷாஹீன் ஷா அப்ரிடி பங்கேற்க மாட்டார் என்றும், அணியை வழிநடத்தும் பொறுப்பு சல்மான் அகாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




