2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில் விபத்து

உள்ளூர்November 3, 2025 · 10 months முன்0
கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில் விபத்து

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புலத்திசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் வம்பொல ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

ரயில் மீது முச்சக்கர வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் பின் இருக்கையில் பயணித்திருந்த இரண்டு பெண்கள் பலத்த காயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து முச்சக்கரவண்டி சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.