மகளிர் உலகக்கிண்ணம் – அரையிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பம்.

மகளிர் உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (29) ஆரம்பமாகின்றன.
முதல் அரையிறுதிப் போட்டியில் இன்று இங்கிலாந்து மகளிர் அணியும் தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் மோதுகின்றன.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்த அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுமென்பது குறிப்பிடத்தக்கது.




