போதைப்பொருள் ஒழிப்புக்குக் கிராம மக்களின் ஈடுபாடு அவசியம்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நாட்டில் போதைப்பொருட்களை ஒழிக்க காவல்துறை நடவடிக்கை மட்டும் போதாது என்று தெரிவித்துள்ளார்.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் சிவில் சமூகத் தலைவர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
மேலும், அவர் தெரிவிக்கையில், போதைப்பொருள் விற்பனையையும் பாவனையையும் தடுக்க கிராம மட்டத்தில் சமூகங்கள் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். போதைப்பொருள் ஒழிப்புக்குக் கிராம மக்களின் ஈடுபாடு மிக அவசியம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.




