வவுனியா கனகராயன்குளத்தில் மின்சாரம் தாக்கி யானை பலி.

வவுனியா – கனகராயகுளம் குறிசுட்ட குளம் பகுதியில் தோட்ட காணி ஒன்றுக்கு போடப்பட்டிருந்த யானை வேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் யானை ஒன்று பலியாகி உள்ளது.
இன்று காலை தோட்டத்திற்குச் சென்ற விவசாயி யானை ஒன்று இறந்து கிடந்ததை அவதானித்ததை எடுத்து அயலவர்களுக்கும் கனகராயன்குளம் பொலீசாருக்கும் தகவலை வழங்கியதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட போது யானை இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.





