தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை.

தீபாவளி பண்டிகை, தமிழ் பாடசா நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நாட்டில் தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று (21) மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்துத் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ் விடுமுறைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் சனிக்கிழமை (25) நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.




