2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மூன்று பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணை.

உள்ளூர்October 16, 2025 · 10 months முன்0
மூன்று பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணை.

பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன அல்லது “கணேமுல்ல சஞ்சீவ” கொலை தொடர்பாக தேடப்பட்டு தப்பியோடிய பெண் சந்தேகநபர் “இஷாரா செவ்வந்தி” உட்பட ஆறு சந்தேகநபர்கள் நேபாளில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட நிலையில், அவர்களை மூன்று பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றன.

இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது சஞ்சீவவின் கொலை தொடர்பான பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, இஷாரா செவ்வண்தி, தக்ஸி என்று அழைக்கப்படும்”டூப்ளிகேட் இஷாரா”, “ஜே.கே. பாய்” மற்றும் “யாழ் சுரேஷ்” ஆகியோர் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறே “கம்பா பாபா” என்று அழைக்கப்படுபவரை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார், அதே நேரத்தில் “நுகேகொட பாபி” என்பவரிடம் மற்றுமோர் பொலிஸ் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.