மின்சார கட்டணம் அதிகரிப்பா ?

நாட்டில் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆணையக்குழு முடிவு செய்யதுள்ள இறுதி முடிவு இம்மாதம் 14 திகதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும். என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதமாக அதிகரிக்க இலங்கை மின்சார வாரியம் முன்மொழிந்துள்ளதாக அதன் இயக்குநர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை மின்சார வாரியத்தின் தொழில்நுட்ப பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் நந்தன உதயகுமார, மறுசீரமைப்பு திட்டங்களை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தத் தவறியதால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.




