2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பூஸா சிறையுள்ளே சிக்கிய பொருள்கள்

உள்ளூர்October 10, 2025 · 10 months முன்2
பூஸா சிறையுள்ளே சிக்கிய பொருள்கள்

கடுமையான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டன.

நேற்று (09) காலை 6.00 மணியளவில் சிறைச்சாலை புலனாய்வு மற்றும் தந்திரோபாயப் பிரிவு மற்றும் காவல்துறை சிறப்புப் பணிக்குழு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது சிறைச்சாலையின் ஏ, சி மற்றும் டி பிரிவுகளில் இந்த கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

சிறப்பு பிரிவு கைதிகளின் பகுதியிலும் மீட்கப்பட்ட கைபேசிகள்

சிறப்புப் பிரிவு கைதிகளான “தெமட்டகொட சமிந்த”, “வெலே சுதா” மற்றும் “மிதிகம ருவான்” ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் ஏ பிரிவிலும் கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஜெகத் வீரசிங்க தெரிவித்தார்.