2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

கடற்பகுதிகளில் பலத்த மழை

உள்ளூர்September 28, 2025 · 11 months முன்1
கடற்பகுதிகளில் பலத்த மழை

கொழும்பில் இருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் இன்று பிற்பகல் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


குறித்த கடற்பிராந்தியங்களில் காற்று 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காலியில் இருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபத்திலிருந்து மன்னார்,
காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்பு சற்று கொந்தளிப்பாக இருக்கும்.

எனவே குறித்த கடற்பிராந்தியங்களில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் போது அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல்
திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது